Monday 30 January 2012

என்னுள்ளே என்னுள்ளே...

Something that I had written for the Global Walk for India's Missing Girls '11. It's been a year since we got together for Voice Of India's Missing Girls (VOIMG). Don't forget to listen to the VOIMG Anthem, if you haven't as yet! 
அம்மா என்றழைத்ததும் பெண்ணை... 
என்னவள் என்றணைத்ததும் மங்கை!

"
கண்ணே" என தான் பெற்ற பெண்ணை
ஏனோ விளிக்க மறக்கிறான்..
ஏற்க... மறுக்கிறான்

போதும் பொன்னமாக்களுக்கு பூமியில் இடம் இல்லை!
போராட நமக்கு, நெஞ்சில் திடம் இல்லை!
பெண்ணுரிமையா?
சொல்லடி சிவசக்தி...
பூமிதனில் பிறந்தால் தானடி உரிமை...!

கண் காணா கண்ணீரை
கருவறையில் சுமந்திருந்தாள்...
"
என் கண்ணே நீ உறங்கு"
என கள்ளிப்பால் கொடுத்திருந்தாள்...
அவள் கண்ணில்...
உதிரம் வழியுதடி தோழி!
இதயம் இடியை ஏற்குதடி!

வலி அல்ல.. வேதனை
ஆக்ரோஷம் இல்லை.. ஆதங்கம்
"
பெண் பெற்று விட்டாயா..
 
வாழ்விழந்து நின்றாயா..."
என்றவர் வாய் அடைக்க
விதி செய்யும் போராட்டம்
 -
இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்
 
இது வீராங்கனைகளின் ரத்த சரித்திரம்!
              
உலக அமைதி ஊர்வலம்  - இந்தியாவின் "பேசப்படாத பெண்சிசுக்களுக்காக"!

தமிழ் பெண்ணே!                             
விழித்தெழு!
வரும் சங்கதி எம்மை மறக்காவிருக்க,
இனி ஒரு விதி செய்வோம்!
நம்மள் தோள் கொடுப்போம்! 
 

1 comment:

  1. Shameem Mahudoom24 June 2013 at 02:34

    கண்ணீர் பாக்கல,
    கதரல் கேக்கல
    அதனாலொ,
    கருவில் கொன்றதை
    நீ பாவத்தில் செக்கல...

    ReplyDelete